2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது; தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

Freelancer   / 2023 ஜூலை 10 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பஸ் விபத்துச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலன்னறுவை  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் தனியார் பஸ் வண்டி மன்னம்பிட்ட கொட்டடி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் சிலர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படும் நிலையில், காணாமல் போனோரைத் தேடும் பணிகள் இன்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்   விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X