Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
கனகராசா சரவணன் / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில், இம்மாதம் 26ஆம், 27ஆம் திகதிகளில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கச் செயலாளர் மகேந்திர ஜெயசிங்க தெரிவித்தார்.
26ஆம் திகதி, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மட்டக்களப்பு - தாமரைக்கேணியல் அமைந்துள்ள தொழிற்சங்க காரியாலயத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் மேலும் தெரிவித்தார்.
உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், கிழக்கு மாகாணத் தலைவர் பொன்னையா சதாகரன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .