Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருப்பதாகவும், 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும் அத்தோடு அதில் நான்கு போர் மரணத்தை தழுவியிருந்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த டெங்கு நோயின் பரம்பலில் முக்கிய விடயமாக காணப்படுவது டெங்கு நுளம்பை அழித்தல் என்னும் விடையத்தில் நாங்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளுதல் அவசியமானதெனவும், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டொங்கு நோயாளர்களை இனங்கண்டிருப்பதால், முக்கியமாக நகரப்பகுதிகளில் டெங்கு நுளம்பை அழிக்கும் செயற்பாட்டை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாக இருப்பதாக
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் இதன்போது தெரிவித்துள்ளார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
23 minute ago
28 minute ago