2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சிகையலங்கார தொழில் பாதிப்பு

Princiya Dixci   / 2021 ஜூன் 08 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

தொடர் பயணத் தடை காரணமாக சிகையலங்கார தொழில் நூறு சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட கல்குடா தொகுதி சிகையலங்கார சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.அஸ்பீர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட முதலாவது கொரோனா அலையிலிருந்து மூன்றாவது அலை வரைக்குமான காலப்பகுதியில் எமது தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தமது சங்கத்தின் கீழ் 15 சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருவதோடு, அதில் 45 பேர் தொழில் புரிந்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் வாழ்வாதாரங்களை இழந்து தொழிலின்றித் தவிக்கும் தமது தொழிலாளர்கள் விடயத்தில் அரச அதிகாரிகளும் தொண்டு நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சங்கத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .