2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

களுதாவளையில் விபத்து; மூவர் காயம்

Princiya Dixci   / 2021 ஜூலை 08 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இன்று (08) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளையிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிப் பணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், கல்லாறு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோத்திக் கொண்டத்தில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பெண்ணொருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

 விபத்து இடம்பெற்ற இடத்துக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .