2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இறந்த நிலையில் கரையொதுங்கிய மற்றுமொரு கடலாமை

Princiya Dixci   / 2021 ஜூன் 29 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

 

அண்மைக்காலமாக கிழக்குக் கடற்கரையிலும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்ற இந்நிலையில், மட்டக்களப்பு -ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் நேற்றிரவு (28) கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இதனை அவதானித்த கடற்கரையில் நின்றிருந்த பொதுக்கள், இது தொடர்பில் வெல்லாவெளி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு விஜயம் செய்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கரையொதுங்கிய ஆமையைப் பார்வையிட்டு, பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .