2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி நீக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் சோதனைச் சாவடிகள், காவலரண்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், மேற்படி பகுதியில் இயங்கி வந்த சோதனைச் சாவடி தற்போர் அகற்றப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை இராணுவ சோதனைச் சாவடி தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X