Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 மார்ச் 15 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் இன்று (15) தெரிவித்தார்.
மருந்து விற்பனை நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கண்டறியும் பொருட்டு தனியார் மருந்து விற்பனை அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மருந்து விற்பனை நிலையங்களில் நிலவும் குறைபாடுகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மருந்து விற்பனை நிலையங்களில் பாரிய குறைபாடுகள் கண்டிறியப்பட்டுள்ளதோடு, இதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், உரிய மருந்தகம் மூடப்படுமெனவும் கூறினார்.
பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் எதிர்காலத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நோயாளிகளுக்கு பாதுகாப்பான மருந்து, மாத்திரைகளை கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டியது எமது பாரிய பொறுப்புகளில் ஒன்றாக காணப்படுவதாகவும் இதனை உரிய மருந்தக உரிமையாளர்கள் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையை பயன்படுத்தி கூடுதலான விலைக்கு மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வதாக பொது மக்களால் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
33 minute ago
43 minute ago