2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆமையும் டொல்பினும் இறந்து கரையொதுங்கின

Editorial   / 2022 ஜனவரி 31 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி      

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளைக் கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் ஆமை ஒன்றும், டொல்பின் ஒன்றும், இன்று (31) காலை கரை ஒதுங்கியுள்ளன.

காலை வேளையில் கடற்கரைக்குச் சென்றவர்களே இதனை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு வன ஜீவராசிஙகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

சுமார் மூன்றரை அடி நீளமாக ஆமையும், 5 அடி நீளமான டொல்பினுமே இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .