2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

சம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பார்சிலோனா

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா முன்னேறியுள்ளது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டை 5-3 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பார்சிலோனா தகுதி பெற்றுள்ளது.

டொட்டமுண்டின் மைதானத்தில் புதன்கிழமை (16) அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றபோதும், தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற நிலையிலேயே 5-3 என்ற மொத்த கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X