2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இறுதிப் போட்டியில் மிலன்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏ.சி மிலன் தகுதி பெற்றுள்ளது.  

பரம வைரியான இன்டர் மிலனை அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு ஏ.சி மிலன் தகுதி பெற்றது.  

முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை (23) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று 4-1 என்ற மொத்த கோல் கணக்கிலேயே இறுதிப் போட்டிக்கு ஏ.சி மிலன் தகுதி பெற்றது.  

ஏ.சி மிலன் சார்பாக லூகா ஜோவிச் இரண்டு கோல்களையும், டிஜ்ஜனி றெஜின்டர்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .