2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

’ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு

Janu   / 2023 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாயகத்தைத் தளமாகக் கொண்ட 'வென்மேரி' அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு 'ஆளுமை விருதுகள்' வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

'வென்மேரி' அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா வாழ் கவிஞருமான அனுரா வெனிஸ்லஸ் தனது நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் ஆகியோரோடு இணைந்து இந்த விருதுகள் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார்.

அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பேராசிரியருமான கலாநிதி சிவலிங்கராஜா அவர்கள் தாயகத்திலிருந்து தனது தலைமை உரையையும் வாழ்த்துச் செய்தியையும் இணைய வழியாக சமர்ப்பித்தார்.

உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வரும் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆளுமைகள் இருபது பேர் இந்த விழாவில் கௌரவிக்கப்பெற்றனர்.  ஒவ்வொரு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்றவர்கள் என வெற்றியாளர்கள் அனைவரும் அங்கு கலந்து கொண்டனர்.

பு கஜிந்தன்

பு கஜிந்தன்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .