2025 மார்ச் 13, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Janu   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:57 - 0     - 62

ETF EPF (ஊழியர்  நம்பிக்கைப்  பொறுப்பு  நிதி /ஊழியர் சேமலாப நிதி )  பணத்தின் கொள்ளை அநியாயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (28) இலைங்கையில்  பல இடங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின்படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் EPF/ETF கணக்குகளின் மீது சுமத்தப்படும் போது அனைத்து ஊழியர்களினதும் (EPF/ETF அங்கத்தவர்களினதும்) சேமிப்புக்களில் இருந்தும் அரைவாசித்தொகை (50%) எதிர்வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லாமற் போகும் அபாயம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசாங்கம் முற்படுகின்றது. இதன் மூலம் EPF/ETF  (ஊழியர்  நம்பிக்கைப்  பொறுப்பு  நிதி /ஊழியர் சேமலாப நிதி )   அங்கத்தவர்களுக்கு நிதிரீதியான உடனடிப்பாதிப்பும் நீண்டகாலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்கபெறாத அபாய நிலையும் உள்ளது என போராட்டகாரர்கள் குற்றம்சாட்டினர்.

எஸ்.சதீஸ், பொகவந்தலாவ

 பு.கஜிந்தன் , யாழ்ப்பாணம்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .