Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 24 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (24) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமும், தமது சகோதரரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றையும் பதிவு செய்திருந்தார்.
“என்னை எவ்விதமான ஆதாரங்களுமின்றி கைது செய்யும் வகையில், இன்று அதிகாலை 1.30 மணி முதல் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள எனது வீட்டின் முன்னால் சிஐடியினர் உள்ளனர். எனது சகோதரரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். இதுவரையில் சகல சட்டபூர்வ விசாரணைகளுக்கும் முழு ஆதரவை வழங்கியுள்ளேன். இது சட்டத்துக்கு முரணானது” என அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .