Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமானது, எரிபொருளுக்காக இந்தியாவிலிருந்து கடனைப்
பெறுவதற்கான முன் நிபந்தனை அல்ல என தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப்
பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடனை
வழங்குவதற்காக , மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா எந்தவொரு
நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு
நிபந்தனை விதித்தா இந்தியா, இலங்கைக்கு கடன் உதவி வழங்கியது என ஊடகவியலாளர்
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலுக்கும் கடனுதவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.
பொதுவாக எந்தவொரு நாட்டிலிருந்தும் கடனைப் பெறும் போது, அதற்கென சில நிபந்தனைகள் இருப்பது வழமை. ஆனால் இந்தியாவிலிருந்து பெறும் கடன், நிபந்தனையின்றி வழங்கப்படுகின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 minute ago
21 minute ago
2 hours ago