2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பெற்றோல் கடை தீப்பற்றியது

Editorial   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி -திருகோணமலை வீதியின் 99ஆம் கட்டை சந்தியில் பெற்றோல் கடையொன்று,  இன்று (09) மதியம் தீப்பற்றிக்கொண்டது.

இதனால் அக்கடை முற்றாக சேதமடைந்துள்ளதுடன், பெண்ணொருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு தடயவியல் பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .