2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

திருகோணமலையில் நீர்வெட்டு

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் நாளை (18) மாலை 06 மணி முதல் நாளை மறுதினம் (19)  மாலை 06 மணி வரை 24 மணி நேர  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தின் சமூகவியலாளர் எம்.ஆர்.ஜே.அரபாத் தெரிவித்தார்.

இதன்படி, தம்பலகாமம் பொறுப்பதிகாரிக் காரியாலயப் பிரிவு, திருகோணமலை நகர்ப் பகுதி, கிண்ணியா, பாலை ஊத்து, ஆண்டாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர் தடைப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தம்பலகாமத்திலுள்ள பிரதான நீர்க் குழாயின் கசிவு காரணமாக, திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையால் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .