Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 21 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெல்லும் பட்சத்தில் ஒன்றரை வருடங்களுக்கு பாராளுமன்றம் கலைக்கப்படாது என்பதில் நம்பிக்கை உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்தார்.
வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மக்கள் அதிக அளவில் வாக்கு அளிப்பதில் ஆர்வம் கொண்டு செயல்படுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க வெல்லும் பட்சத்தில் பாராளுமன்றம் ஒன்றரை வருடங்களுக்கு கலைக்கப்படாது” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago