2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Freelancer   / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரையில் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன தொடர்பில் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறித்த காய்ச்சல் காரணமாக பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .