Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் இப்பலோகம மஹாலுப்பள்ளம் பகுதியில் இன்று (24) காலை யானை மீது பயணிகள் பஸ் மோதியதில் 06 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவயிலிருந்து அனுராதபுரம் நோக்கி தலாவ வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயிலுப்பள்ளம் பகுதியில் திடீரென வீதியைக் கடந்த காட்டு யானையுடன் குறித்த பஸ் மோதியதாகவும், காட்டு யானையை மோதிய பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் காயங்களுக்குள்ளாகி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago