2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

”மூத்தவர்களிடம் ஈறு நோய் அதிகரித்துள்ளது”

Simrith   / 2025 மார்ச் 20 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மூத்த குடிமக்களிடையே ஈறு நோய்  அதிகரித்து வருவதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் நிலந்த ரத்நாயக்க கூறுகிறார் .

ஊடகங்களுக்கு உரையாற்றிய வைத்தியர்  நிலந்த ரத்நாயக்க, 50% க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஈறு நோயால் பாதிக்கப்படுவதாகக் கூறினார். 

பொதுமக்கள் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண முடிந்தால் இந்த நோயைத் தவிர்க்க முடியும் என்று  மருத்துவர் நிலந்த ரத்நாயக்க கூறினார்.

"முதல் அறிகுறி ஈறுகளில் இரத்தப்போக்கு. ஆனால், பற்பசை பயன்படுத்துவதால் மக்களால் இதை அடையாளம் காண முடியவில்லை. ஈறுகளில் இரத்தம் வருகிறதா என்று பார்க்க, மாதத்திற்கு ஒரு முறையாவது பற்பசை இல்லாமல் பல் துலக்குமாறு நான் மக்களுக்கு அறிவுறுத்துகிறேன்," என்று அவர் கூறினார். 

இந்தச் செயல்முறையின் போது ஈறுகளில் இரத்தம் கசிந்தால், மருத்துவ உதவியை நாடுமாறு மருத்துவர் நிலந்த ரத்நாயக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .