2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

மிதமான நிலையில் காற்றின் தரம்

S.Renuka   / 2025 ஏப்ரல் 09 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணி நேரத்தில் கண்டி, கேகாலை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் நல்ல காற்றின் தரம் பதிவாகியுள்ளதுடன், ஏனைய பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவுகள் பதிவாகியுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், கேகாலை, நுவரெலியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான அளவைக் குறிக்கும் வகையில் காற்றின் தரக்குறியீடு சுட்டெண் 38 – 64 க்கு இடையில் இருக்கும்.

அத்துடன், கண்டி, கேகாலை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு மிதமான நிலையில் இருக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X