2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

மதுபானசாலைகளுக்கு பூட்டு

Simrith   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை முழுவதும் உள்ள மதுக்கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வரவிருக்கும் போயா தினம் (ஏப்ரல் 12) மற்றும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 13 , 14) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்தக் காலகட்டத்தில் செயல்படும் மதுக்கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X