2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை, ஆதிகோயிலடியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த  நபர் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து வீதியோரமாக நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். இதன்போது வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.

விபத்தில் குறித்த  நபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 65 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X