2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

R.Tharaniya   / 2025 மார்ச் 13 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள நுவன் மெண்டிஸ் வியாழக்கிழமை(13)காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா  அதிபர் காரிய வளாகத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதை தொடர்ந்து பிரதி பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றார் .
 
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலி ரத்னாவின் தலைமையில் இடம்பெற்ற இப்பதவி ஏற்பு நிகழ்வில் மாவட்டத்தின் 15 பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியாச்சகர்கள்,உட்பட மாவட்டத்தின் பிரதான பொலிஸ் அதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்
 
மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமை புரிந்த ஜகத் நிசாந்த இடமாற்றம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
 
பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சர்வ மத ஆசீர்வாதங்களை தொடர்ந்து புதிய பொலிஸ் மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது சர்வ மத தலைவர்களின் ஆசி உரைகளும் இடம் பெற்றன.
ரீ.எல்.ஜவ்பர்கான்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .