2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மக்கள் பேரணிக்கு தயாராகும் விமல் தரப்பு

Freelancer   / 2022 மார்ச் 13 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகள் உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் மக்கள் பேரணியொன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என அறியமுடிகிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரியில் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து ‘மஹிந்த சுலங்க’ என்ற பெயரில் நுகேகொடையில் கூட்டம் நடைபெற்ற அதே இடத்திலேயே இதுவும் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அரசாங்கப் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும்  இம்மாத இறுதியில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடு முழுவதும் மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்த பங்காளிக் கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .