2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

போலி அட்டவணையை நம்ப வேண்டாம்

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஊடகங்களில் பரவி வரும் 2021 (2022) க.பொ.த உயர் தர (உ/த) போலி பரீட்சை அட்டவணையை பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து சரியான நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்யுமாறு திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன பரீட்சார்த்திகளைக் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாவதுடன், பிற்பகல் பரீட்சைகள் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணிக்கும் ஏனைய நாட்களில் பிற்பகல் 1.00 மணிக்கும் பரீட்சைகள் ஆரம்பமாகும் என்றும்  ஆணையாளர் தெரிவித்துள்ளார். .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .