2025 மார்ச் 03, திங்கட்கிழமை

போதைப்பொருள் குளிசைகளுடன் ஒருவர் கைது

Janu   / 2025 மார்ச் 02 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு குற்றப்பிரிவு ,  500,000 சட்டவிரோத போதைப்பொருள் குளிசைகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய  நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொப்பரா சந்திப் பகுதியில்  சனிக்கிழமை (01).அன்று இரவு மேற்கொண்ட  சோதனையின் போது, 500,000 சட்டவிரோத போதைப்பொருள் குளிசைகளை வேனில் கொண்டு சென்ற  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு  மேற்கொண்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .