Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Editorial / 2025 மார்ச் 28 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் கேகாலையில் வசிக்கும் இஷான் உதய குமார (38) என்ற சிப்பாய் ஆவார், அவர் வவுனியாவில் உள்ள பன்பேமடுவ இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த சிப்பாய், மேலும் மூன்று சிப்பாய்களுடன், அதே இராணுவ தளத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாயின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கீழ் திவுல்வேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறுதிச் சடங்குகளை வியாழக்கிழமை (27) முடித்துக்கொண்டு இராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கீழ் திவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த இராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
5 hours ago