Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 27 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என பாணந்துறை பிரதான நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
கூடுதலாக, 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
வேதநாயகம் எட்வின் நிமல் என்ற பேருந்து சாரதிக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.
இதன்போது, சாரதியிடம் இருந்து மது வாசனை வந்த நிலையில், பொலிஸார் அவரைக் காவலில் எடுத்து, சோதனை செய்தனர்.
இதில், குறித்த நபர் மது அருந்தியிருந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தி, நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அவரை கடுமையாக எச்சரித்த பின்னர் இந்த தண்டனையை நீதவான் விதித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
5 hours ago