2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாளையதினம் 5 மணி நேர மின்வெட்டு

Freelancer   / 2022 மார்ச் 22 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளையும் (23) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான பிரிவுகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடமும் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .