2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நாணய நிதியத்தை நாடுகிறது இலங்கை

Freelancer   / 2022 ஜனவரி 29 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள பைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அவர் இந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.

6.9 பில்லியன் டொலர் கடனை இவ்வருடம் செலுத்துவது இலங்கைக்கு மிகவும் கடினமானது எனவும், மருந்துகள், எரிபொருள் உட்பட அனைத்துக்கும் நிதியைத் திரட்ட வேண்டியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .