2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் பல இடங்களில் கடும் மழை பெய்யும்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை அண்மித்த பகுதியில் உருவாகியுள்ள தாழ் வளிமண்டல குழப்பம் காரணமாக, இன்று (30) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, அத்தனகல, களு, களனி, ஜின், நில்வளா மற்றும் மகாவலி கங்கைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X