2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

Freelancer   / 2025 மார்ச் 22 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை - தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை - தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளனர். 
 
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளது.
 
வான் ஒன்றில் வந்த தரப்பினர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .