2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

Editorial   / 2025 ஜனவரி 12 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளத. .

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களஞ்சியம், முனிஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ, பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்கள் வடக்கு மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை கைது செய்தனர்.

8 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு 72 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 554 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X