Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 22, சனிக்கிழமை
J.A. George / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அவர் உயிரிழந்தார்.
மித்தெனிய, கடேவத்த சந்தி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து, நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது மகனும் மகளும் காயமடைந்தனர்.
பின்னர் தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago