Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களில் இருந்த சாராயம் அழிக்கப்படவிருந்ததால், அதில் இருந்த சாராயம் ,தேநீராக மாறிய சம்பவம் குறித்து நீதிமன்றப் பதிவாளர் வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவின் உத்தரவின்படி நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்படவிருந்த 81 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 150 பீர் போத்தல்களும் இவ்வாறு கலங்கிய தண்ணீராகவும் தேநீராகவும் மாற்றப்பட்டுள்ளன.
17 மதுபான போத்தல்கள் உடைக்கப்பட்டபோது இது தெரியவந்தது, மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து போத்தல்களையும் பறிமுதல் செய்து நீதிமன்ற பொறுப்பின் கீழ் எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்கள் தேநீர் நீராக மாற்றப்பட்டமை குறித்து விசாரணை நடத்தக் கோரி, நீதிமன்றப் பதிவாளர் வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு நீதவான் நீதிமன்றம், செயல் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
2 hours ago
2 hours ago