Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 08 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது கால் சட்டைப் பையில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முனையத்தில் காத்திருந்த விமானப் பயணி ஒருவரை விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
29 வயதான இவர் இந்தியாவிலிருந்து அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவராவார்.
அவர் புறப்பாடு முனையத்தில் இருந்து, விமானப் பயணிகள் மையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது கால் சட்டைப் பையில் ஒரு சிறிய பையில் 01 கிலோ 158 கிராம் எடையுள்ள 09 தங்க பிஸ்கட்டுகளையும் மேலும் 03 தங்க பிஸ்கட்டுகளையும் மீட்டுள்ளனர். அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரையும், அவரிடம் இருந்த தங்க பிஸ்கட்டுகளையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
41 minute ago
49 minute ago
51 minute ago