2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காலி சிறையில் மேலும் இருவருக்கு காய்ச்சல்

Mayu   / 2024 ஜனவரி 07 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி சிறைச்சாலையில் தற்போது 07 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

05 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (06) மேலும் இரு கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காலி சிறைச்சாலையில் பார்வையாளர்களைப் பார்ப்பது மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், புதிய கைதிகளை அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பவும் சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .