2024 ஒக்டோபர் 05, சனிக்கிழமை

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Freelancer   / 2024 ஜூலை 07 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போரா ஆன்மீக மாநாடு இன்று முதல் 16 ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று  முதல் 16 ஆம் திகதி வரை காலி வீதி, கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி மரைன் டிரைவிற்குள் பிரவேசிக்கும் பல வீதிகள் சில மணிநேரங்கள் மூடப்படவுள்ளன.

அத்துடன், மாநாடு நடைபெறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .