2024 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்குச் சட்டம் அமுல்

Simrith   / 2024 செப்டெம்பர் 21 , பி.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (21) இரவு 10 மணிமுதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது

தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்கள் தங்களது உத்தியோகபூர்வ அடையாள ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுப் பயணத்திற்காக விமான நிலையத்திற்குச் செல்பவர்கள் தங்களது பயணச்சீட்டு மற்றும் பயண ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெளிநாட்டு பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்புபவர்கள் தங்கள் விமான டிக்கெட்டுகள் மற்றும் பிற பயண ஆவணங்களை ஊரடங்கு உத்தரவு பாஸ்களாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .