2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

“இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள்”

S.Renuka   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதய நோய்  காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 பேர் மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. இதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும் என்று மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணர் டாக்டர் கோட்டாபய ரணசிங்க கூறினார்.

டெய்லி மிரரிடம் பேசுகையில், ஒட்டுமொத்தமாக பதிவாகும் இறப்புகளில் 20% கரோனரி ஆர்டரி நோயால் (CAD) ஏற்படுவதாக அவர் வெளிப்படுத்தினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இதய நோய்கள் 15% அதிகரித்துள்ளதாகவும், இதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தினமும் 200 நோயாளிகள் வருவதாகவும் டாக்டர் ரணசிங்க எடுத்துரைத்தார்.

இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடைய காரணிகள் மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை என்று அவர் கூறினார்.

இருப்பினும், ஆரம்பகால தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் இதய நோய்கள் உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்.

குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X