2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

இன்று முதல் பன்றிகளை கொண்டு செல்ல தடை

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்டங்களுக்கு இடையில் பன்றிகளை கொண்டு செல்வது, இன்று (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 பன்றிகளுக்கு பரவும் ஒருவகை வைரஸ் நோய் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார  திணைக்களத்தின் பணிப்பாளர்  ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

மேற்கு, வடமேற்கு உட்பட பல மாகாணங்களில், இந்த வைரஸ் நோய் பரவி வருவதாகவும், அவர் கூறினார்.

மேலும், “இந்த வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நோயினால் உயிரிழந்த பன்றிகளின் இறைச்சியை உண்பது அங்கிகரிக்கப்படவில்லை” என  ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். (AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .