2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு

J.A. George   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதத்தில் சுமார் 30,000 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

வெளியான தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில், 29,763 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இது 20.6 சதவீதம் ஆகும். 

இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 866,596 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 148,078 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 105,472 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 85,206 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X