Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 15 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க அவர்களால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிபுணர் டொக்டர் எம்.கே. சம்பத் இந்திக குமார குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றைய உறுப்பினர்களாக சுகாதார அமைச்சின் (நிர்வாகம்) திருமதி டபிள்யூ.யு.கே. குரூஸ் மற்றும் சுகாதார அமைச்சின் விசாரணை அதிகாரி திரு. ஓ.பி.ஜே. டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குறிப்பிடத்தக்க நிர்வாக குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை ஊழியர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் இல்லாமை, வைத்தியசாலையின் நிலையான மற்றும் மொபைல் சொத்துக்களை முறையாக நிர்வகிக்காமை போன்ற காரணங்களால் இந்த சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்ச் 10, 2025 அன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவே, மேற்கண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
15 Mar 2025