2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

அரச குடியிருப்பு கட்டண மிகுதிகளை கவனிக்குமாறு பணிப்புரை

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர்கள் தங்களுடைய அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்குமாறு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இதன்படி 28 அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒப்படைக்கும் போது, ​​மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டண மிகுதிகளை செலுத்துவது கட்டாயம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்ட பின்னரே அரச குடியிருப்புகளை கையகப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 அமைச்சின் அறிவிப்பை தொடர்ந்தும் தவிர்க்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .