2025 மார்ச் 19, புதன்கிழமை

அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு

S.Renuka   / 2025 மார்ச் 19 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாளை வியாழக்கிழமை  (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி. கூறும் எந்தவொரு கருத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வந்த ஏராளமான புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

"அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை எம்.பி. பலமுறை புறக்கணித்து வருவதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று சபாநாயகர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X