2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

அபேகுணவர்தனவை நீங்கியது தாமரை மொட்டு

Editorial   / 2024 செப்டெம்பர் 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையிலிருந்தும் தேசிய அழைப்பாளர் பதவியிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானத்திற்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் மற்றுமொரு வேட்பாளரை ஆதரித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அபேகுணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அபேகுணவர்தனவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை மற்றும் கட்சியின் ஏனைய அனைத்து பதவிகளில் இருந்தும் இடைநிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .