2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

அனுராதபுர சந்தேகநபருக்கு 48 மணிநேர தடுப்புக்காவல்

Editorial   / 2025 மார்ச் 13 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலும் விசாரணைக்காக 48 மணி நேரம் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சந்தேக நபருக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபரை மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .