2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அடுத்தவாரம் இந்தியா செல்கிறார் பசில்

Freelancer   / 2022 மார்ச் 12 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகராலம் இன்றையதினம் (12) பதிவிட்ட டுவிட் பதிவிலேயே  மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களை அடுத்தவாரம் இந்தியாவிற்கு வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான தற்போதைய முயற்சிகளை அவரது விஜயம் வலுவூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது“ என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .